50,674 மாணவ, மாணவிகள் 12-ம் வகுப்பு தேர்வை எழுதவில்லை.. பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

 
Exam

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழித்தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்த தேர்வுகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவர்களாக 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ - மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுத இருக்கின்றனர். 

Exam

சென்னை மாநகரில் மட்டும் 405 பள்ளிகளில் இருந்து 45 ஆயிரத்து 982 மாணவ - மாணவிகள் தேர்வை எழுத உள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3 ஆயிரத்து 225 இடங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வான தமிழ் மொழித்தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று தொடங்கிய 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 50,674 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

DPI

பள்ளிகளை சேர்ந்த 8,51,303 மாணவ, மாணவிகளில் 49,559 பேர் இன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத வரவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் 12-ம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வை தனித்தேர்வர்கள் 1,115 பேரும் எழுத வரவில்லை என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

From around the web