தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 478 பேர் டிஸ்சார்ஜ்!

 
TCV

இன்று ஒரே நாளில் 449 பேருக்கு கொரோனா பாதிப்பு என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது, இதனால் மொத்த பாதிப்பு 35,71,479 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மேலும் 79 பேருக்கும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 38=70 பேருக்கு உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 7,87,945 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவிலிருந்து 478 பேர் குணமடைந்தயுள்ளனர், இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 35,28,482 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 4,960 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 17,108 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 6,78,04,688 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார், இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,037 ஆக உள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

From around the web