ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் குளத்தில் மூழ்கி பலி.. கதறும் பெற்றோர்கள்.. சிவகங்கையில் அதிர்ச்சி!!

 
Sivaganga

உலகம்பட்டி கிராமத்தில் குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவ​ம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவங்கை மாவட்டம் உலகம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் நாகராஜன். இவரது மனைவி புவனேஸ்வரி. இந்த தம்பதிக்கு யாழினி என்ற மீனாட்சி (10) என்ற மகள் உள்ளார். அதேபோல் நாகராஜனின் தம்பி லட்சுமணன் அதே கிராமத்தில் வசித்து வருகிறார். லட்சுமணன் மனைவி தனம். இந்த தம்பதிக்கு மகேந்திரன் (7), சந்தோஷ் (5) என இரண்டு மகன்கள் உள்ளனர்.

water

இந்த நிலையில் பள்ளி விடுமுறை தினமான இன்று யாழினி, மகேந்திரன் (7), சந்தோஷ் (5) ஆகிய மூன்று பெரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள படமஞ்சி என்ற கிராமத்தில் உள்ள செட்டி ஊரணியில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் அங்கு குளிக்க சென்றுள்ளார். குளிக்க சென்ற சிறுவர்கள் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பின்னர் சிறுவர்களின் உடல்கள் குளத்தின் நீரில் மிதந்துள்ளது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் உலகம்பட்டி போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவம இடத்திற்கு விரைந்து வந்த உலகம்பட்டி போலீசாரும், தீயணைப்பு துறையினரும் பொதுமக்களுடன் இணைந்து மிதந்த  சிறார்களின் உடல்களை மீட்டனர்.

Ulagampatti PS

பின்னர் கைப்பற்றி உடல்களை பிரேத பரிசோதனைக்காக பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் உலகம்பட்டி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளது அந்த கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  

From around the web