வாளி தண்ணீரில் மூழ்கி 2 வயது குழந்தை பரிதாப பலி.. கதறி அழுத பெற்றோர்கள்!

 
Thiruvalam

காட்பாடி அருகே வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தை வாளியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம், ஆரிமுத்து மேட்டூர், நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மகள் ரேச்சல் (2). நேற்று மாலை ரேச்சிலின் தாய் வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தார். சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிகொண்டு இருந்தார். அப்போது வீட்டிற்கு வெளியே வாளியில் இருந்த தண்ணீரில் சிறுமி விளையாடினார்.

baby

அப்போது எதிர்பாராத விதமாக சிறுமி தவறி வாளியில் உள்ள தண்ணீரில் விழுந்தார். இதில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக ரேச்சல் இறந்தார். நீண்ட நேரத்திற்கு பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுமியின் தாய் குழந்தை வாளியில் உள்ள தண்ணீரில் மூழ்கிக் கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக குழந்தையை மீட்டு பார்த்தபோது மகள் ரேச்சல் இறந்து கிடந்தது தெரிய வந்தது. மகளின் உடலை பார்த்து தாய் கதறி துடித்தார். இந்த சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது. இது குறித்து திருவலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Thiruvalam PS

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவலம் போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகதைத ஏற்படுத்தியுள்ளது.

From around the web