தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா... ஒருவர் பலி!

 
TCV

இன்று ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது, இதனால் மொத்த பாதிப்பு 36,09,537 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மேலும் 38 பேருக்கும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 136 பேருக்கு உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 7,96,928 ஆக உயர்ந்துள்ளது.

corona

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவிலிருந்து 382 பேர் குணமடைந்தயுள்ளனர், இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 35,69,594 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,870 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 5,740 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 6,94,72,426 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

corona

மேலும், தமிழ்நாட்டில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார், இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,073 ஆக உள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

From around the web