+1 பொதுத் தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு.. எப்படி பார்க்கலாம் தெரியுமா?

 
Exam

தமிழ்நாட்டில் ப்ளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 14-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு கடந்த 6-ம் தேதி வெளியானது. இதில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர். அதனைத் தொடர்ந்து 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு நேற்று (மே 10) வெளியானது. இதில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர்.

Result

இந்த நிலையில் ப்ளஸ்-1 மாணவர்கள் எழுதிய பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 14-ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில் ப்ளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.

Results

தமிழ்நாட்டில் ப்ளஸ்-1 தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள நிலையில் தேர்வு முடிவுகளை 14-ம் தேதி www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

From around the web