பெண் ஊழியர் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்து ரசித்த அண்ணன் தம்பிகள்.. திடீரென கேட்ட அந்த சத்தம்..!! நடந்தது என்ன..?

 
Video

இரணியல் அருகே அரசு பெண் ஊழியர் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த அண்ணன் - தம்பி 2 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே காரங்காடு தெற்கு தெருவை சேர்ந்தவர் 40 வயது பெண். இவர், அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வீட்டில் குளித்துக்கொண்டிருந்த போது மர்ம நபர்கள் யாரோ செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

Police-arrest

இதை பார்த்து அந்த பெண் அதிர்ச்சியடைந்து அலறி கூச்சலிட்டுள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக அந்த பெண் ஊழியர் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்தது அதே பகுதியை சேர்ந்த அண்ணன் - தம்பிகளான செல்லத்துரை (33), சின்னத்துரை (28) என்பது தெரியவந்தது.

Eraniel PS

இதனையடுத்து செல்லத்துரை, சின்னத்துரை ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பெண்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

From around the web