துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் - ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு!!

பதவிக்காலம் முடிந்தும் நீட்டிப்பு இல்லாமலேயே தமிழ்நாடு ஆளுநராக நீடித்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரை டெல்லியில் சந்தித்துப் பேசியுள்ளார். பதவி நீட்டிப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆர்.என்.ரவிக்கு எதிரான உச்சநீதிமன்றத் தீர்ப்பு பாஜக தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆர்,என்.ரவியின் நடவடிக்கையால் ஒன்றிய அரசுக்கு சட்ட நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆர்.என்.ரவி மேலும் நீடித்தால் அது பாஜக- அதிமுக அணிக்கு எதிராகவே இருக்கும் என்று நம்ப்படுவதால் அவரை மாற்றிவிட்டு புதிய ஆளுநர் நியமிக்கப்படலாம் என்ற பேச்சுகள் எழுந்துள்ளது. இந்நிலையில் ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்துள்ளார் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர்.
தனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள ஜெகதீப் தன்கரை டெல்லியில் சந்தித்துப் பேசியுள்ளார் ஆர்.என்.ரவி. இது மரியாதை நிமித்தமான சந்திப்பா அல்லது தன்னுடைய பதவி நீட்டிப்புக்கு ஆர்.என்.ரவி ஆதரவு திரட்டும் முயற்சியா என்று தெரியவில்லை.