கதவு திறக்காத வந்தேபாரத் ரயில்! பயணிகள் தவிப்பு!!

 
Vande Bharat

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குச் சென்ற வந்தே பாரத் ரயிலின் கதவுகள் திறக்காததால், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றது. பின்னர் கொடை ரோட்டில் நின்ற வந்தேபாரத் ரயிலில், திண்டுக்கல்லி இறங்க வேண்டிய பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.

அங்கிருந்து திண்டுக்கல் மார்க்கமாக சென்ற ரயில்களில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். கதவு திறக்காததால் ரயில் நிற்காமல் சென்ற செய்தி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தென்னக ரயில்வே விசாரணை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

வந்தேபாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டது முதலாகவே பல்வேறு எதிர்மறைச் செய்திகள் வந்தவாறு இருக்கும் நிலையில் கதவு திறக்கவில்லை என்ற தகவல் ரயில் கட்டமைப்பில் உள்ள குறைகளைச் சொல்வதாகவே உள்ளது.

From around the web