பானி பூரி சாப்பிட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. ஆந்திராவில் சோகம்!

 
Andhra

ஆந்திராவில் பானிபூரி சாப்பிட்ட இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சின்ன ஜமக்கா. இந்த தம்பதிக்கு ராமகிருஷ்ணா (11), விஜய் (6) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது மகன்களுடன் ஊரில் உள்ள ஒரு பானிபூரி கடைக்கு சென்றனர். தந்தை வாங்கி கொடுத்த பானிபூரியை சாப்பிட்டுவிட்டு சிறுவர்கள் வீட்டுக்குச் சென்று தூங்கினர்.

Panipuri

நேற்று அதிகாலை 3 மணியளவில் இளைய மகன் விஜய்க்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர், பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ராஜமகேந்திராவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து காலை 6.30 மணியளவில், மூத்த மகன் ராமகிருஷ்ணனுக்கு, கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. ஏலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், செல்லும் வழியிலேயே அவர் பிரதாபமாக உயிரிழந்தார். பானிபூரி சாப்பிட்டதால் மகன்கள் இறந்ததாக பெற்றோர்கள் கூறினர்.

boy-dead-body

தூங்கும் போது ஏதேனும் விஷ பூச்சி கடித்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் இரவில் வீட்டில் சாப்பிட்ட உணவு, பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

From around the web