குஜராத், மஹாராஷ்ட்ராவிலிருந்து பாகிஸ்தானுக்கு வர்த்தகம் தொடர்கிறது... அகாலி தள எம்பி குற்றச்சாட்டு!!

காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இந்திய விமானங்களுக்கு வான்வெளியை மூடியுள்ளது பாகிஸ்தான். சிந்து நதியின் நீரை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் குஜராத், ம்ஹாராஷ்ட்ரா துறைமுகங்களிலிருந்து பாகிஸ்தானுடன் வர்த்தகப் பரிமாற்றம் தொடர்ந்து நடைபெறுவதாக அகாலி தள எம்.பி. ஹர்சிம்ரத் கவுர் பாதல் குற்றம் சாட்டியுள்ளார். எல்லாருக்கும் ஒரே சட்டம் வேண்டும். பஞ்சாப் எல்லையை மூடிய ஒன்றிய அரசு குஜராத் மும்பை எல்லைகளை ஏன் மூடவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இவரின் பேச்சு சமுகத்தளங்களில் வைரலாகிப் பரவி வருகிறது. காஷ்மீர் தீவிரவாதச் செயலை பீகார் தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அகாலி தள எம்.பி.யின் குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
குஜராத் துறைமுகங்கள் எல்லாம் பாகிஸ்தானோடு வர்த்தகம் செஞ்சுட்டு தான் இருக்கு. முதல்ல அதை தடுத்து நிறுத்துங்கள் - அகாலி தள எம்பி.
— Unmai Kasakkum | உண்மை கசக்கும் (@Unmai_Kasakkum) April 26, 2025
குஜராத் துறைமுகங்கள் எல்லாம் அதானி கிட்ட இருக்கு.
சங்கீகள் இரட்டை வேடம் போடுவதை எப்போது நிறுத்த போகிறார்கள்? pic.twitter.com/RkcYM1n96c