ஃபேஸ்புக் மூலம் உல்லாச வலை விரித்த பெண்.. ஆசையாக சென்ற இளைஞருக்கு நேரந்த சோகம்!

 
Andhra

ஆந்திராவில் ஃபேஸ்புக்கில் அறிமுகமான இளைஞரை உல்லாசத்திற்கு அழைத்த பெண், அவரை கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராஜம்பேட் மண்டலத்தில் உள்ள இசக்க பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருக்கும் கடப்பா பகுதியைச் சேர்ந்த சுதாராணி என்பவருக்கும் இடையே ஃபேஸ்புக் மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளனர். இந்த அறிமுகம் நட்பாக மாறிய நிலையில் அதனை மேலும் வளர்த்து கொள்ள வெங்கடேஷ் ஆவலுடன் இருந்துள்ளார்.

murder

வெங்கடேசின் மனநிலையை புரிந்து கொண்ட சுதாராணி வீடியோ கால் மூலம் அவரை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். அப்போது வெங்கடேஷிடம் கடப்பாவுக்கு நேரில் வந்தால் உல்லாசமாக இருக்கலாம் என ஆசையை சுதாராணி தூண்டி இருக்கிறார். நீண்ட நாள் ஆசை நிறைவேற போகும் எண்ணத்துடன் வெங்கடேஷ் கடப்பாவுக்கு சென்றுள்ளார்.

ஆட்கள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதிக்கு வெங்கடேசை சுதாராணி அழைத்து சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே தயாராக நின்றிருந்த சுதாராணியின் நண்பர்கள் நவீன், பிரதாப் ஆகியோர் வெங்கடேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். வெங்கடேஷின் கண்கள், கைகளை கட்டி ஒரு வீட்டிற்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

Police

பின்னர் வெங்கடேஷை அவருடைய குடும்பத்தினருடன் செல்போனில் வீடியோ காலில் பேச வைத்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். வெங்கடேஷ் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் கடப்பா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். வெங்கடேஷ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீசார் வீட்டிற்குள் அடைக்கப்பட்டிருந்த அவரை மீட்டனர். மற்றொரு வீட்டில் இருந்த சுதாராணி, நவீன், பிரதாப் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

From around the web