டிவியை ஆப் செய்த மகன்.. கழுத்தை நெரித்து கொன்ற தந்தை.. உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் போது விபரீதம்!

 
UP

உத்தரபிரதேசத்தில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியை பார்க்கவிடாமல் டிவியை ஆப் செய்த மகனை தந்தையே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

13வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில், தொடரின் இறுதிப்போட்டி கடந்த 19-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த ஆஸ்திரேலியா அணிக்கு இந்தியா வெறும் 240 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. 241 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 43 வது ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கு எட்டியது.

இதனிடையே, உத்தரபிரதேசத்தில் இறுதிப்போட்டியை பார்க்கவிடாமல் டிவியை ஆப் செய்த மகனை தந்தையே கழுத்தை நெரித்து கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

dead-body

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரைச் சேர்ந்தவர் கணேஷ் பிரசாத். இவரது மகன் தீபக். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான உலகக்கோப்பை இறுதிப்போட்டியை கணேஷ் பிரசாத் தனது வீட்டில் டிவியில் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, முதலில் இரவு உணவு சமைத்துவிட்டு பின்னர் கிரிக்கெட்டை பார்க்குமாறு கணேஷ் பிரசாத் இடம் மகன் தீபக் கூறியுள்ளார். மேலும், தீபக் டிவியை ஆப் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேஷ் செல்போன் சார்ஜ் வயரால் மகனின் கழுத்தை நெரித்துள்ளார். இதில், தீபக் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

UP

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீபக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மகனை கொன்ற கணேஷ் பிரசாத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web