பிரதமர் பட்டப்படிப்பு விவகாரம்! பல்கலைக்கழகம் தரப்பில் விளக்கம்!!

பிரதமரின் பட்டப்படிப்பு மற்றும் அவருடன் படித்தவர்களின் விவரங்களைத் தருமாறு டெல்லி பல்கலைக்கழகத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடிதம் அனுப்பபட்ட நிலையில், பல்கலைக் கழகம் மறுத்து விட்டது.
மத்திய தகவல் ஆணையர் பிரதமர் பட்டப்படிப்பு விவரங்களை தருமாறு டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்தது. 2017ம் ஆண்டு இடைக்காலத் தடை விதித்த நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான அரசு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பொதுமக்களுக்கு ஒரு விஷயத்தில் ஆர்வம் ஏற்பட்டால் அது பொது நலன் இல்லாமல் இருக்கலாம். இந்த விஷயத்தில் ஏதேனும் பொதுநலன் உள்ளதா? இல்லை என்பதே பதில். பிரதமரின் கல்வி குறித்த தகவல்களை ஒரு நம்பிக்கைக்குரிய வகையில் வைத்திருக்கிறது. பொதுநலன் இல்லாத நிலையில் வெறும் ஆர்வத்தின் அடிப்படையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில், தனிப்பட்ட தகவல்களைத் தேட உரிமை இல்லை என்று கூறினார்.