போலீஸ் ஸ்டேஷனில் பாலியல் தொல்லை.. சிறுமியை நிர்வாணமாக்கிய காவல் ஆய்வாளர்.. அதிர்ச்சி சம்பவம்..!

 
Sexual Harresment

அசாமில் காவல் நிலையத்திற்குள் சிறுமி நிர்வாணப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்த ஆய்வாளர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டத்தில் உள்ள கோக்ராபர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது காதலனை திருமணம் செய்ய வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். காதலர்கள் இருவரையும் கோக்ராபர் காவல் நிலைய போலீசார் பிடித்து கைது செய்தனர். காதலர்கள் இருவரும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அன்றைய இரவு லாக் அப்பில் அடைத்து வைக்கப்பட்டனர். 

rape

அப்போது தான் 17 வயது சிறுமிக்கு கொடூரம் நிகழ்ந்துள்ளது. அங்கு பணிபுரிந்த காவல் ஆய்வாளர் பிமான் ராய் சிறுமியை மிரட்டி ஆடைகளை களைய வைத்து நிர்வாணப்படுத்தி உள்ளார். காவல் நிலையத்தில் மற்ற போலீசார் முன்னர் சிறுமியை நிர்வாணமாக்கி அதை புகைப்படம் எடுத்த பிமான் ராய், தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

பாதிப்புக்குள்ளான சிறுமி தனக்கு நேர்ந்த அவலத்தை புகார் கடிதமாக எழுதி காவல்துறை உயர் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து டிஐஜி பிரஜென்ஜித் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பாக அறிக்கையை அசாம் டிஜிபி ஜிபி சிங்கிடம் சமர்பித்தார்.

POsco

சிறுமியின் புகாரின் அடிப்படையில் பீமான் ராயை சஸ்பெண்ட் செய்து அசாம் டிஜிபி ஜிபி சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். பீமான் ராய் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக இருக்கும் பீமான் ராயை தீவிரமாக தேடி வருகின்றனர். காவல் நிலைத்திற்குள் சிறுமி நேர்ந்து இந்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web