நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 
Leave

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சக்தியை வழிபட நவராத்திரி என்னும் ஒன்பது இரவுகள் இருப்பது போல், சிவபெருமானை வழிபாடு செய்ய மகா சிவராத்திரி என்னும் ஒரு நாள் முக்கியமானதாக இருக்கிறது. இந்த நாளில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான 4 ஜாம வேளைகளில் சிவபெருமானை பூஜை செய்வது மோட்சத்தை வழங்கும் என்பது ஐதீகம்.

Shiva

இந்த ஆண்டு இன்று (மார்ச் 8) மாலை 6 மணி தொடங்கி நாளை மறுநாள் (மார்ச் 9) காலை 6 மணி வரை மகா சிவராத்திரி தினம். சிவராத்திரி தினத்தன்று இரவு கண் விழிப்பது மிக அவசியம். விளக்கேற்றுவதும், அபிஷேகப் பொருட்கள் கொடுப்பதும் மிகுந்த புண்ணியத்தை தரும். சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

Tomorrow-is-a-holiday-only-for-all-government-middle-school

இந்த நிலையில், மகா சிவராத்திரியையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் நாளை (மார்ச் 9) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கையை ஏற்று நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட  ஆட்சியர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார்.

From around the web