பந்தளம் அரசகுடும்பத்தின் சசிகுமார் வர்மா காலமானார்.. தலைவர்கள் இரங்கல்

 
Sasikumar Varma

பந்தளம் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும், அரண்மனை நிர்வாகக் குழுவின் முன்னாள் தலைவருமான பி.ஜி.சசிகுமார் வர்மா நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 71.

1952-ம் ஆண்டு மே 13-ம் தேதி கோட்டயம் கிடங்கூர் பாட்டியல் கோதாசர்மன் நம்பூதிரிபாடு மற்றும் அம்பிகாவிலாசம் அரண்மனையைச் சேர்ந்த அம்பிகா தம்புராட்டி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் சசிகுமார் வர்மா. இவர், செயலகத்தில் சேர்வதற்கு முன்பு தேசாபிமானியில் அதிகாரப்பூர்வ துணை ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கினார். 2007-ம் ஆண்டு துணைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற அவர், பல்வேறு சமூக அமைப்புகளில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.

Sasikumar Varma

பந்தளம் கேரள வர்மா நினைவு வாசகசாலையின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றினார் மற்றும் க்ஷத்ரிய க்ஷேம சபையின் மாநிலத் தலைவராகவும் செயலாளராகவும் பதவி வகித்தார். 1996-ம் ஆண்டு இ.கே.நாயனார் ஆட்சியில் அமைச்சர் பாலோலி முஹம்மது குட்டியின் தனி உதவியாளராகவும், வி.எஸ்.அச்சுதானந்தன் ஆட்சிக் காலத்தில் அவருக்கு கூடுதல் தனிச் செயலாளராகவும் பணியாற்றினார்.

வயோதிகம் மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக திருவல்லாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மாரடைப்பால் காலமானார். புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பந்தளம் அரண்மனையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்படும்.

Sasikumar Varma

பந்தளம் அரச குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு மனைவி மீரா வர்மா மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இவரது மறைவுக்கு  அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

From around the web