வெள்ள நிவாரணத் தொகை அறிவித்த புதுச்சேரி முதல்வர்!

 
Puduchery CM

ஃபெஞ்சல் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மக்களுக்கு நிவாரணத் தொகை அறிவித்துள்ளார் முதலமைச்சர் ரங்கசாமி.

தமிழ்நாட்டின் விழுப்புரம், சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் வெளுத்தெடுத்த மழை புதுச்சேரியையும் விட்டு வைக்கவில்லை. வெள்ளத்தால் வீடுகள் சேதமடைந்துள்ளன. மக்கள் வெள்ள நீர் சூழ்ந்து சிக்கியுள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 

வீடுகள் சேதமடைந்து இருந்தால் வீட்டு உரிமையாளர்களுக்கு 5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்

புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய் அரசிடம் 2 ஆயிரம் கோடி ரூபாய் இடைக்கால நிவாரணத் தொகை கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது..

From around the web