இந்தியாவில் மீண்டும் வருகிறது பப்ஜி.. ரசிகர்களுக்கு குட் நியூஸ்!!

 
PUBG

இந்தியாவில் பப்ஜி விளையாட்டை அனுமதிக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென் கொரிய நாட்டை சேர்ந்த கிராப்டன் நிறுவனத்துக்கு சொந்தமானது பப்ஜி. இந்த விளையாட்டு இந்தியாவில் குறுகிய காலத்திலேயே அதீத வரவேற்பை பெற்றது. இந்தியாவில் இ-ஸ்போர்ட்ஸ் துறை வளர்ச்சியில் பப்ஜிக்கு முக்கிய பங்கு உண்டு.

எனினும், இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்சினை வலுவடைந்தபோது பல்வேறு சீன செயலிகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. அப்போது பப்ஜி விளையாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டது. பின்னர் இந்திய அரசுடன் ஆலோசனை நடத்தி கிராப்டன் நிறுவனம் பிஜிஎம்ஐ என்ற பெயரில் மீண்டும் பப்ஜி விளையாட்டை வேறு வடிவில் அறிமுகப்படுத்தியது.

PUBG

இருப்பினும், மீண்டும் பிஜிஎம்ஐ விளையாட்டுக்கு ஒன்றிய அரசு தடை விதித்து உத்தரவிட்டது. சுமார் 10 மாதங்களாக பிஜிஎம்ஐ விளையாட்டுக்கு இந்தியாவில் தடை அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது பிஜிஎம்ஐ விளையாட்டுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கிராப்டன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “மீண்டும் பிஜிஎம்ஐ விளையாட்டை அனுமதித்ததற்காக ஒன்றிய அரசு அதிகாரிகளுக்கு நன்றி. கடந்த சில மாதங்களாக பொறுமையுடன் எங்களுக்கு ஆதரவு அளித்ததற்காக இந்திய கேமிங் சமூகத்துக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

PUBG

விரைவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பிஜிஎம்ஐ விளையாட்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம் எனவும் கிராப்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பப்ஜி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக வெளிவந்துள்ளது.

From around the web