ரயில் நிலைய டிவியில் திடீரென ஒளிபரப்பான ஆபாச வீடியோ.. பயணிகள் அதிர்ச்சி! பகீர் வீடியோ

பாட்னா ரயில் நிலைய தகவல் பலகையில் ஆபாச வீடியோ ஒளிபரப்பான சம்பவம் அதிர்ச்சிபை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னா ரயில் நிலையத்தில் உள்ளூர் மக்களையும் தாண்டி, ஏராளமான மற்ற மாநில பயணிகளும் அதிகளவில் பயன்படுத்துவது வழக்கம். அந்த வகையில் நேற்று வழக்கம்போல் தங்களது ரயில்களுக்காக பயணிகள் காத்துக்கொண்டிருந்த நிலையில், காலை 9.30 மணியளவில் நடை எண் 10-ல் பொறுத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியில் விளம்பரத்திற்குப் பதிலாக ஆபாச வீடியோ ஒளிப்பரப்பானது.
இதையடுத்து பயணிகள் பலரும், அதனை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து பிளர் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். சில பயணிகள் பதறியடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினர். மூன்று நிமிடங்கள் ஆபாச வீடியோ ஓடிய நிலையில், உடனடியாக ரயில்வே அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.
இதுதொடர்பாக அங்கிருந்த பயணிகள், ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே போலீசாரிடமும் புகார் அளித்தனர். பயணிகளின் புகாரையடுத்து, ரயில்வே போலீஸ், விளம்பரம் ஒளிபரப்பும் ஒப்பந்ததாரரான தத்தா கம்யூனிகேஷன் ஏஜென்சியை தொடர்புகொண்டு, ஆபாச வீடியோவை உடனடியாக நிறுத்துமாறு கூறியது.
ரயில் நிலையத்தில் ஆபாச வீடியோ ஒளிபரப்பு.. பொதுமக்கள் அதிர்ச்சி#Patna #Bihar #railway #porn pic.twitter.com/3tS1vZpG6G
— A1 (@Rukmang30340218) March 20, 2023
மேலும், ஆபாச வீடியோவை ஒளிபரப்பிய தத்தா கம்யூனிகேஷன் ஏஜென்சி மீது எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்யப்பட்டு, அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன், ரயில்வே கருப்புப் பட்டியலில் ஏஜென்சியை சேர்த்துள்ளதுடன், அபராதமும் விதிக்கப்பட்டு, விசாரணை தனியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆபாச படம் ஓடிய வீடியோவை பிளர் (blurr) செய்து, சமூகவலைத்தளத்தில் அந்த வீடியோ வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.