நிர்வாண பூஜை.. ஆசைவார்த்தை கூறி சிறுமிகளிடம் அத்துமீறிய போலி சாமியார்.. நள்ளிரவில் திக்திக்!!

 
Andhra

ஆந்திராவில் பூஜையில் உட்கார்ந்த 2 சிறுமிகளிடம் போலி பூசாரி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பூசாரி நாகேஸ்வர ராவ். இவர், பில்லி சூனியம் வைப்பது எடுப்பது என்பது போன்ற சித்து வேலைகளை செய்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் தொடர்ந்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் பூஜை என்ற பெயரில் பாலியல் அத்து மீறல்களில் ஈடுபட முடிவு செய்துள்ளார். 

அதற்கு, தன்னுடைய நண்பர் நாகேந்திர பாபு என்பவரிடம், ஒரு மணி நேரம் நடைபெறும் நிர்வாண பூஜையில் உட்கார்ந்து பூஜை செய்ய இளம் பெண்கள் தேவை என்று கூறியுள்ளார். அவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுக்கிறேன் என்று கூறினார். இதன் மூலம் எனக்கு சிறிய அளவில் புதையல் கிடைக்கும் உனக்கும் அதில் பங்கு கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதை நம்பிய நாகேந்திர பாபு தன்னுடன் படித்த இளம் பெண் ஒருவரை ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி குண்டூருக்கு வரவழைத்தார். இந்த நிலையில் ஒரு இளம் பெண் உட்பட மேலும் சிலர் அங்கு வந்து சேர்ந்த நிலையில், நாகேஸ்வர ராவ், நாகேந்திர பாபு ஆகிய இருவரும் சேர்ந்து அவர்களை குண்டூரில் உள்ள ஒரு லாட்ஜில் தங்க வைத்தனர்.

abuse

கடந்த 9-ம் தேதி இரண்டு பெண்களையும் குண்டூர் அருகே பூனக்கல்லு கிராமத்தில் உள்ள போலி பூசாரி நாகேஸ்வர ராவின் வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு நிர்வாண பூஜை மேற்கொண்டனர். அப்போது இரண்டு இளம் பெண்களையும் ஒரு அறையில் அடைத்து வைத்த பூசாரி நாகேஷ்வர ராவ் இரண்டு பெண்களையும் நிர்வாணமாக்கி பூஜை என்ற பெயரில் அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடமுயன்றதாக தெரியவந்துள்ளது.

இதற்கு அந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே பூஜை பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மறுநாள் காலை அங்கு வசிக்கும் பொதுமக்கள் நாகேஸ்வர ராவை அழைத்து இங்கு என்ன நடக்கிறது என்று கேள்வி எழுப்பினர். இதனால் அச்சமடைந்த நாகேஸ்வர ராவ் இரண்டு பெண்களையும் அழைத்து கொண்டு சிலக்கலூர் பேட்டையில் உள்ள தன்னுடைய நண்பர் வீட்டிற்கு சென்றார். 

Police-arrest

அங்கு கடந்த 11-ம் தேதி மீண்டும் நிர்வாண பூஜை நடத்த முயன்றார். அப்போது மீண்டும் அந்த பெண்களிடம் நாகேஸ்வர ராவ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சித்தார். இதனால் பயந்து போய் அங்கிருந்து தப்பி ஓடிய இரண்டு பெண்களும் தங்களுடைய செல்போனில் இருந்த திசா செயலி மூலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த நல்லபாடு போலீசார் இரண்டு பெண்களையும் மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இரண்டு பெண்களும் அளித்த தகவலின் அடிப்படையில் போலி பூசாரி நாகேஸ்வர ராவ், அவருக்கு உதவிய நாகேந்திர பாபு ஆகியோர் உளிட்ட 12 பேரில் இரண்டு பெண்கள் மற்றும் மூன்று ஆண்களை முதலில் கைது செய்த போலீசார் பின்னர் ஏழு பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

From around the web