கேட்டுக்கோங்க மக்களே.. ஆசிரியர்கள் இல்லையென்பதால் இந்தியாம்!!

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலும் மாணவர்களுக்கு இந்தி மொழி கட்டாயம் என்று அரசு அறிவித்து இருந்தது. இதற்கு அரசியல் கட்சிகளும் மொழி சார்ந்த அமைப்புகளும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வேறு மொழிகளுக்கு ஆசிரியர்கள் இல்லாததால் தான் இந்தி மொழி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக மஹாராஷ்ட்ரா மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியுள்ளார். மேலும் 20 மாணவர்கள் ஒன்றாகக் கேட்டுக் கொண்டால் வேறு மொழி கற்றுத்தரப்படும் என்றும் கூறியுள்ளார்.
1 முதல் 5 வரை படிக்கும் மாணவர்கள் 20 பேர் ஒன்று கூடி எங்களுக்கு இந்த மொழி கற்றுத்தாருங்கள் என்று கேட்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? மும்மொழிக் கொள்கை என்பது இந்தித் திணிப்பு தான் என்று தமிழ்நாட்டில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து கூறி வருகிறது என்பதை நினைவில் கொண்டால், அது தான் உண்மை என மஹாராஷ்ட்ரா அரசு நிருபித்துள்ளதல்லவா!