இது ஆணா..? இல்ல பெண்ணா..? பெண் வேடத்தில் அம்மனுக்கு நன்றி சொன்ன ஆண்கள்!! வைரல் வீடியோ

 
Kerala

கேரளாவில் நடைபெற்ற சமய விளக்குத் திருவிழாவில், ஏராளமான ஆண்கள், பெண் வேடமிட்டு அம்மனுக்கு நன்றி செலுத்தினர்.

பெண்கள் வேடமிட்ட ஆண்களின் கரங்களில் அன்னையின் அருளைபெற கரங்களில் தாம்பூல தட்டுக்களில் விளக்குக்களை ஏந்தி காண்போர் விழிகளை வியக்கவைக்கும் வண்ணம் வண்ண விளக்கொளிகளின் ஒளிசிதறல்கள் காண்போரை மெய் சிலிர்க்க வைக்கிறது.

Kerala

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டம்குளக்கரா தேவி கோவிலில் ஆண்டுதோறும் மலையாள மீனம் மாதத்தில் சமய விளக்கு திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள் வேடமிட்டு பங்கேற்பர். பெண்கள் வேடமிட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதன் மூலம் செல்வம் பெருகும் என்பது அவர்களின் நம்பிக்கை.

மாலை முதலே ஆலயத்து படையெடுக்கும் ஆண்கள் கோவிலில் விற்கப்படும் 5 முக விளக்கை வாங்கி அதில் தீபம் ஏற்றி இரவு முழுவதும் கோயிலை சுற்றி வந்து வழிபடுவது வாடிக்கை. ஆண்களுக்கு ஒப்பனை செய்வதற்காகவே பல ஒப்பனை கலைஞர்கள் கோவில் வாசலில் உள்ளனர். அவர்களிடம் ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்கள் மிகவும் உற்சாகமாக இந்த பூஜையில் கலந்து கொள்கின்றனர். சிறந்த ஒப்பனை செய்த ஆண்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன.


முன்பெரும் காலத்தில் கோவில் அமைந்துள்ள பகுதிகளில் மேச்சலுக்கு சென்ற சிறுவர்கள் ஒரு கல்லில் தேங்காய் உடைத்தபோது அதில் இருந்து குருதி வழிந்ததாகவும் இது குறித்து ஊர் மக்கள் ஜோதிடரிடம் கேட்டபோது அது கல் அல்ல வானதுர்கா என்று தெரிவித்துள்ளார். அன்று முதல் அங்கு கோவில் எழுப்பி ஆண்டுதோறும் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் மூங்கில்களால் கூரை அமைத்து அமைக்கப்பட்ட இந்த கோயில் பின்னர் சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் பெண்கள் மட்டுமே வழிபட்டு வந்த நிலையில் கோவிலுக்குள் நுழைய ஆண்கள் பெண் வேடமிட்டு சென்றதால் காலப்போக்கில் அந்த வழக்கமே நிலைத்துவிட்டதாக கூறப்படுகிறது. 

From around the web