ஐஐடி மாணவியைக் கடத்தி கூட்டுப் பலாத்காரம்.. வீடியோ எடுத்த பாஜக நிர்வாகிகள் கைது!

 
UP

உத்தர பிரிதேசத்தில் மாணவியைக் கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு செய்த வழக்கில் பாஜக ஐடி விங்கைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஐஐடி பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த நவம்பர் 1-ம் தேதி தனது தோழியுடன் அங்குள்ள ஷாப்பிங் மாலுக்குச் சென்று விட்டு திரும்பியுள்ளார். அப்போது ஆள் நடமாட்ட இல்லாத இடத்தில் வரும் போது மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை பைக்கில் வந்து கடத்திச் சென்றுள்ளனர்.

இளம்பெண் கூச்சலிட்டது அவரது வாயைத் துணியால் கட்டி அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளனர். அங்கு மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. மேலும், மாணவியை பாலியல் ரீதியில் துன்புறுத்தி அதை வீடியோவாக எடுத்துள்ளது. பின்னர், அந்த 3 பேரும் அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர்.

Rape

இதனையடுத்து அந்த மாணவி தனது பல்கலைக்கழகத் தோழிகளிடம் கூறினார். அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அப்போது அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது பிரிஜ் என்கிளேவ் காலனி சுந்தர்பூரைச் சேர்ந்த குணால் பாண்டே, ஜிவாதிபூர் பஜார்திஹாவைச் சேர்ந்த அபிஷேக் சவுகான் என்ற ஆனந்த் மற்றும் பஜார்திஹாவைச் சேர்ந்த சக்ஷாம் படேல் என லங்கா எஸ்ஹோ சிவகாந்த் மிஸ்ரா என்பது தெரிய வந்தது.

இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பல்கலைக்கழக மாணவ, மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டம் நடத்தியும் குற்றவாளிகளை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

arrest

பல்கலைக்கழக மாணவ, மாணவியரின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் வாரணாசி பாஜக ஐடி பிரிவு நிர்வாகிகளாக செயல்பட்டு வந்துள்ளனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட 3 பேரையும் கட்சியில் இருந்து நீக்கி பாஜக மாவட்ட தலைவர் விஷ்வகர்மா உத்தரவிட்டுள்ளார்.   

From around the web