மனைவியின் முகத்தை எவ்வளவு நேரம் பார்ப்பீங்க! எல்&டி சேர்மனின் திமிர் பேச்சு!!
பிரபல கட்டுமானம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைக் கூறி கடும் எதிர்ப்புகளை சந்தித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுப்பிரமணியன், “வீட்டில் அமர்ந்து என்ன செய்யப் போகிறீர்கள்? மனைவியின் முகத்தை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்? அலுவலகத்துக்கு வந்து வேலை செய்யுங்கள்.ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களை வேலை செய்ய வைக்க முடியவில்லை என்பதை எண்ணி நான் வருந்துகிறேன். அப்படி என்னால் அதை செய்ய முடிந்தால் நிச்சயம் நான் மகிழ்ச்சி அடைவேன். ஏனென்றால் நான் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்கிறேன். உலகில் முதல் நிலையில் இருக்க வேண்டுமென்றால் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக இன்போசிஸ் நாராயணமூர்த்தி, இளைஞர்கள் வாரத்துக்கு 6 நாட்கள் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய கோரிக்கையை சில மாதங்களுக்கு முன்பு முன்வைத்தார். அதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில். தற்போது எல் அண்ட் டி நிறுவனத் தலைவர் சுப்பிரமணியன் வாரத்தின் 7 நாட்களும் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது கடும் எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது.
மேலும் மனைவியின் முகத்த்தை எவ்வளவு நேரம் தான் உற்றுப் பார்க்க முடியும் என்று கூறியிருப்பது பெண்களை அவமதிக்கும் செயலாகவும் கருதப்படுகிறது.