குடும்ப பிரச்சினை; 4 பச்சிளம் குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய்!! ராஜஸ்தானில் நடந்த கொடூரம்

 
Rajasthan

குடும்ப பிரச்சனையால் 4 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதில் 4 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் ஜிகல்புரா கொலா கிராமத்தில் வசித்து வருபவர் பொத்ராம். விவசாயம் தொழில் செய்து வரும் இவருக்கு மதினா (32) என்ற மனைவியும், கோமல் (4), ரிங்கு (3), ராஜ்வீர் (2), தேவ்ராஜ் (பிறந்து 1 மாதம்) என 4 குழந்தைகள் உள்ளன.

water

இந்த நிலையில், மதினாவுக்கும் அவரது கணவர் பொத்ராம் மற்றும் குடும்பத்தினர் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, நேற்று மதினாவுக்கும் அவரது கணவர் குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த மதினா தனது 4 குழந்தைகளை அழைத்துக்கொண்டு கிராமத்திற்கு அருகே உள்ள ஆட்நடமாட்டம் அற்ற பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்பகுதியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் தனது 4 குழந்தைகளையும் வீசிய மதினா தானும் கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். குழந்தைகளும், மதினாவும் வீட்டில் இல்லாதத்தை அறிந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் கிராமம் முழுவதும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால், கிராமத்திற்கு வெளியே இருந்த கிணற்றுக்குள் பார்த்தபோது குழந்தைகளுடன் மதினா கிணற்றுக்குள் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

boy-dead-body

பின்னர், 5 பேரையும் ஊர் மக்கள் கிணற்றில் இருந்து வெளியே கொண்டுவந்தனர். ஆனால், கிணற்றில் தண்ணீருக்குள் மூழ்கிய 4 குழந்தைகளும் உயிரிழந்த நிலையில், குழந்தைகளின் தாய் மதினா உயிருடன் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web