வக்ஃப் சட்ட வழக்கு திமுக மனுத் தாக்கல்.. தவெக மனு எங்கே?

 
Supreme-Court

வக்ஃப்  திருத்த சட்டத்தை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்று திமுக உள்பட 100க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் முதல் கட்ட விசாரணையின் போது சட்டத்தை அமல்படுத்துவதற்க்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

100க்கும் மேற்பட்ட மனுக்களில் நடிகர் விஜய்யின் தவெக சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவும் ஒன்றாகும். உச்சநீதிமன்ற இடைக்காலத் தடையை விஜய் தான் பெற்றுத் தந்தார் என்று அந்தக் கட்சியின் தேர்தல் பிரச்சார செயலாளர் ஆதவ் அர்ஜுனா பெருமையடித்துக் கொண்டார்.

ஆனால் உச்சநீதிமன்றம் 5 மனுதாரர்களின் வாதங்களை மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் ஒன்றிய அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு கூறியுள்ளவற்றில் உண்மை இல்லை. சட்டத் திருத்த மசோதாவில் எதிர்க்கட்சியினரின் கருத்துக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்ப்ட்டது,

வக்ஃப் திருத்த சட்டத்தை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்று திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

நாங்க தான் நீதிமன்றத்தில் வெற்றியைப் பெற்றுத் தந்தோம் என்று தம்பட்டம் அடித்த தவெக சார்பில் ஒன்றிய அரசுக்கு எதிரான மனு ஏதும் தாக்கல் செய்யப்பட்டதாக தகவல் ஏதும் இல்லை.

From around the web