10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேதி அறிவிப்பு.. பிப்ரவரி மாதம் துவங்குகிறது CBSE பொதுத்தேர்வுகள்!

 
CBSE

10 மற்றும் 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவணர்களுக்கான பொதுத் தேர்வு தேதி ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலேயே, பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்படும் ஆண்டு நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டு இருக்கும்.

CBSE

அந்த வகையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு (2024) மார்ச் மாதம் 18-ம் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ஏப்ரல் 8-ம் தேதியும் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு எப்போது? என்ற எதிர்பார்ப்பு அந்த தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் இருந்தது. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சி.பி.எஸ்.இ. நிர்வாகம் 10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

CBSE

அதன்படி, 10-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி முதல் மார்ச் மாதம் 21-ம் தேதி வரையும், 12-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பிப்ரவரி 17-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரையும் நடக்க உள்ளது.

From around the web