ஓடும் ரயிலில் திருமணம் செய்த ஜோடி.. பயணிகள் வாழ்த்து.. வைரல் வீடியோ!

வீட்டை விட்டு ஓடி வந்த காதல் ஜோடி ஓடும் ரயிலில் திருமணம் செய்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் இணையதளம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் திருமண வீடியோ மிக வித்தியாசமாக உள்ளது. இதில் வீட்டை விட்டு ஓடி வந்த காதல் ஜோடி ஓடும் ரயிலில் திருமணம் செய்துகொண்ட நிகழ்வை காண முடிகின்றது.
ரயிலில் கூட திருமணம் செய்துகொள்ள முடியுமா என்ற கேள்வி பலருக்கு எழலாம். ஆனால், இந்த வீடியோவை பார்த்தால், அப்படியும் நடந்துள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும். வைரலாகி வரும் வீடியோவில், ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதைக் காண முடிகின்றது. இந்தக் கூட்டத்தில் ஒரு இளைஞன் தன் காதலியிடம் ஏதோ விளக்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். பெண்ணின் நெற்றியில் குங்குமம் இடப்பட்டு இருக்கிறது. பெண் சற்று பயந்த முகத்துடன் காணப்படுகிறார். அவர் தன் காதலனை அணைத்துக்கொள்கிறார். அந்த இளைஞன் பெண்ணை அமரும் படி கூறுகிறார்.
ரயில் இருக்கையில் பெண் அமர்ந்தவுடன், அந்த இளைஞன் சிறுமியின் கழுத்தில் தாலி கட்டுகிறார். பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணி தன்னிடம் இருந்த மலர் மாலையில் ஒன்றை இளைஞனுக்கும், மற்றொரு மாலையை அந்த பெண்ணுக்கும் கொடுக்கிறார். மாலையை வாங்கிய பெண் எழுந்து நிற்கிறார். பின்னர் இருவரும் மாலை மாற்றிக்கொள்கிறார்கள்.
அதற்குப் பிறகு, அந்தப் பெண் தன் புது கணவனை கட்டிப்பிடித்து, பின் கால்களில் விழுந்து வணங்குகிறார். ரயிலில் இருந்த மொத்த கூட்டமும் தம்பதியைச் சுற்றித் திரண்டு, முழு சம்பவத்தையும் பார்க்கிறது. இந்தக் கூட்டத்தில் இருந்த அனைவரும் இவர்களின் திருமணத்திற்கு ஆதரவாகக் காணப்படுகின்றனர்.
இந்த வீடியோ max_sudama_1999 என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. ஓடும் ரயிலில் திருமணம் நடந்த இடம் அசன்சோலுக்கும் ஜாசிதிக்கும் இடையே உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திருமணத்தை ரயிலில் இருந்த ஏராளமான பயணிகள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். இந்த வைரலான வீடியோ ஆயிரக்கணக்கான லைக்குகளையும் வியூஸ்களையும் பெற்றுள்ளது. வைரலாகும் இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் தங்களது கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.