கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா.. தினசரி பாதிப்பு 500-ஐ தாண்டியது

 
JN1

கேரளாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று புதிதாக 752 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதே நேரத்தில் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,420 ஆக உயர்ந்துள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

KCV

குறிப்பாக கேரளாவில் கடந்த சில நாட்களாக ஜே.என்.1 எனப்படும் புதிய வகை கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதாக அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தற்போது தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும் இதில் கவலைப்படும் வகையில் எதுவும் இல்லை.

Venna George

கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கேரளாவில் அதிக அளவிலான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிங்கப்பூர் விமான நிலையத்தில் 19 இந்திய பயணிகளுக்கு ஜே.என்.1 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இனி வரும் நாட்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று உயர வாய்ப்புள்ளது.” என்று கூறியுள்ளார்.

From around the web