கழிவுநீரில் கட்டுக்கட்டாக கிடந்த ரூபாய் நோட்டுகள்.. துள்ளி குதித்து அள்ளி செல்லும் மக்கள்! வைரல் வீடியோ

 
Bihar

பீகாரில் கழிவுநீரில் கட்டுக்கட்டாக சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை, பொதுமக்கள் அள்ளிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பீகார் மாநில்ம பாட்னா அருகே உள்ள சசாராம் பகுதியில் பாலத்திற்கு அடியில் ஓடிய கழிவுநீரில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்தன. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பாலத்தில் கூடினர். கழிவுநீரில் ரூபாய் நோட்டுகள் மிதப்பதை உறுதி செய்த அப்பகுதி மக்கள், சாக்கடைக்குள் இறங்கினர்.

cash

சாக்கடைக்குள் இறங்கியவர்கள் 2000, 500, 100 ரூபாய் நோட்டுகளை அள்ளிச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

இதையடுத்து பணத்தை கொண்டு சென்ற சிலர் அவை உண்மையான நோட்டுகள் என்று குறிப்பிட்டுள்ளனர். அதே சமயம் அவை போலியான தாள்கள் என்று ஒரு சிலர் கூறினர். கழிவுநீரில் ரூபாய் நோட்டுகளை வீசியவர்கள் யார் என்றும், அதன் உண்மைத்தன்மை குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


இதனிடையே இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ரூபாய் நோட்டுகளை எடுக்க கழிவுநீரில் பொதுமக்கள் சிலர், குதித்து எடுத்து செல்கின்றனர்.

From around the web