9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை... உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டிய இளைஞன்!! ராஜஸ்தானில் கொடூரம்!!

 
Rajasthan Rajasthan

ராஜஸ்தானில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்குமூட்டையில் கட்டி வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டம் மால்வி பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 29-ம் தேதி மாயமானார். பழங்குடியின சமுகத்தை சேர்ந்த சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். 

rape

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மாயமான சிறுமியை தேடி வந்தனர். ஆனால், கடந்த 1-ம் தேதி அந்த கிராமத்தில் பாழடைந்த கட்டிடத்தில் இருந்து சிறுமி பிணமாக மீட்கப்பட்டார். சிறுமியின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சாக்குமூட்டையில் கட்டி வீசப்பட்டுள்ளார்.

சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் சிறுமியின் அண்டை வீட்டில் வசித்து வந்த 20 வயது இளைஞனை கைது செய்தனர். 

arrest

பள்ளிக்கூட படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கிராமத்தில் வசித்துவந்த கமலேஷ் என்ற அந்த இளைஞர் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து பின் சிறுமியை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்குமூட்டையில் அடைத்து பாழடைந்த வீட்டில் வீசிவிட்டு எதுவும் தெரியாததுபோல் ஊருக்குள் சுற்றி வந்துள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்ட இளைஞர் கமலேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

From around the web