FB லைவ்-ல் நேர்ந்த சோகம்... காதலியின் துரோகத்தை பொறுக்க முடியாத இளைஞர் கழுத்தை அறுத்து தற்கொலை

 
UP

உத்தரபிரதேசத்தில், காதலி துரோகம் செய்ததை பொறுக்க முடியாத இளைஞர், ஃபேஸ்புக் நேரலையில் வீடியோ எடுத்தபடி, கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதே மாநிலம் மகாராஜ் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புரந்தர்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகவான்பூர் பகுதியில் வசிக்கும் இளைஞன் தனது காதலியை துரோகம் செய்ததாக குற்றம் சாட்டி பேஸ்புக் லைவ் மூலம் இயந்திரத்தால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

dead-body

நேரலையின் போது, ​​அந்த இளைஞன் தனது காதலியின் குடும்ப உறுப்பினர்களை கடுமையாக திட்டியுள்ளார். அந்த நேரத்தில், பலர் அவரை அவ்வாறு செய்ய விடாமல் தடுத்தனர், ஆனால் அவர் அதையும் மீறி வேதனையுடன் தனது உயிரைக் மாய்த்துக் கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளைஞரின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான விசாரணையில், காதலித்த பெண்ணிற்கு, அவரது வீட்டில் வேறொரு நபருக்கு திருமணம் செய்து வைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்ததாகவும், அதற்கு காதலியும் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.


இதனால் மனவேதனை அடைந்த அந்த இளைஞர், பேஸ்புக் நேரலையில் காதலி மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரைக் கூறியபடி, கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரியவந்துள்ளது.

From around the web