புதுச்சேரியில் சோகம்! அரசுப் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

 
Puducherry

புதுச்சேரியில் 4-ம் வகுப்பு மாணவி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி யூனியன் லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி ரேகா. இந்த தம்பதியினருக்கு மூன்று மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர், இவர்களது இரண்டாவது மகள் ரித்திகா (10). இவர் கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி லாஸ்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

Suicide

இந்த நிலையில் விடுமுறைக்காக தனது வீட்டிற்கு வந்த ரித்திகா, பெற்றோரிடம் கேட்காமல் வீட்டில் இருந்து பணம் எடுத்து கொண்டு தின்பண்டம் வாங்கி உள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மனம் உடைந்த ரித்திகா தனது வீட்டின் அருகே இருந்த மரத்தில் துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைக்கண்ட ரித்திகாவின் பெற்றோர் கதறி அழுதனர். இதையடுத்து மாணவியின் தாயார் ரேகா லாஸ்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த லாஸ்பேட்டை போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Lawspet

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 10 வயது சிறுமி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது

From around the web