டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை! உத்தரப் பிரதேச அரசு மருத்துவமனையில் அவலம் 

 
Up
உத்தரபிரதேச அரசு மருத்துவமனையில் பேட்டரி திருட்டு போவதால், மின்தடை நேரத்தில் ‘டார்ச் லைட்’ வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது
உத்தர பிரதேச மாநிலம், பலியா மாவட்டத்தில் பெய்த கனமழையால் அங்கு உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையிலும் மின்தடை ஏற்பட்டதால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். இந்த சூழ்லில், ‘டார்ச் லைட்’ வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Up
அந்த வீடியோவில், பெண் நோயாளி ஒருவர் ஸ்ட்ரெச்சரில் படுத்திருப்பதும், அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் வருகின்றனர். அந்தப் பெண்ணுக்கு ஸ்டெதாஸ்கோப் மூலம் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்ட போது, அருகில் இருந்த மற்றொருவர் டார்ச் லைட் ஒளியைக் காட்டிக் கொண்டிருந்தார். ஜெனரேட்டரில் பொருத்தப்படும் பேட்டரி அடிக்கடி திருடப்படுவதால், தேவைப்படும் போது அவை பொருத்தப்பட்டு பயன்படுத்தப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட மருத்துவமனையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் பலியா மாவட்ட மருத்துவமனையின் தலைமைப் பொறுப்பாளருமான டாக்டர் ஆர்.டி.ராம் கூறுகையில், “ஜெனரேட்டருக்கான பேட்டரிகளைப் பெறுவதில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஜெனரேட்டரில் பேட்டரி திருடுபோகும் என்ற பயம் எப்போதும் உண்டு. எனவே அவை பயன்பாட்டில் இல்லாதபோது அகற்றப்படும். மருத்துவமனையில் ஜெனரேட்டர் இருக்கிறது. ஆனால் பேட்டரிகளைப் பெறுவதற்கு நேரம் எடுத்தது” என்று அவர் கூறினார்.


 

அதே வேளையில் மருத்துவனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவது வாடிக்கையாக மாறிவிட்டதாகவும், மருத்துவமனை நிர்வாகம் பொதுவாக ஜெனரேட்டரைப் பயன்படுத்துவதில்லை என்றும் கூறினர்.

From around the web