தண்ணீர் பாட்டிலுக்காக உயிரை பணயம் வைத்த பெண்!! பதைபதைக்கும் வீடியோ

 
UP

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் தண்ணீர் பாட்டிலுக்காக உயிரை துச்சமாக நினைத்து ரயில் முன் சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. இது தொடர்பாக இந்திய ரயில்வே டிராஃபிக் போலீசான சஞ்சய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

UP

அந்த வீடியோவில், பெண் ஒருவர் தண்டவாளம் வழியாக வந்து எதிர் திசையில் இருந்த நடைமேடையில் ஏற முயற்சித்திருக்கிறார். அவரால் ஏற முடியாததால் அங்கிருந்த ரயில்வே ஊழியரை உதவிக்கு அழைத்திருக்கிறார். இதனைக் கண்டவர் உடனடியாக வந்து அப்பெண்ணை மேலே இழுத்திருக்கிறார்.

அவர் மேலே வந்த சில நொடிகளிலேயே விரைவு ரயில் ஒன்று அவ்வழியே வரவும் மேலே வந்த அப்பெண் உடனடியாக நடைமேடை முனையில் வைத்த தண்ணீர் பாட்டிலை எடுக்க முற்பட்டிருக்கிறார். இதனைக் கண்டதும் அங்கிருந்த ரயில்வே போலீசார் அவரை கண்டித்து இருக்கிறார். இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள ஷிகோஹாபாத்தில் உள்ள ரயில் நிலையத்தில் நடந்திருக்கிறது.


இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள், வெறும் தண்ணீர் பாட்டிலுக்காக காப்பாற்றப்பட்ட உயிரை மீண்டும் மாய்த்துக்கொள்ள நினைத்தது எத்தனை பெரிய முட்டாள்தனம் என்று கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

From around the web