கூலி தொழிலாளி ஓட ஓட விரட்டி படுகொலை.. நடுரோட்டில் நடந்த பயங்கரம்! அதிர்ச்சி வீடியோ
தெலங்கானாவில் பட்டப்பகலில் கூலி தொழிலாளியை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்த நிலையில், சம்பவம் தொடர்பான காட்சி வெளியாகி உள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள புரனாபூல் 100 அடி சாலையில் அடையாளம் தெரியாத சிலர் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கிய சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. இந்த கொடூரமான சம்பவத்தை அந்த வழியாக சென்ற சிலர் தங்களது செல்போனில் பதிவு செய்துள்ள வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.
சம்பவத்தின் வீடியோக்களில், மூன்று பேர் ஒருவரைத் தாக்குவதும், அவரை சாலையில் தள்ளிவிட்டு ஆயுதங்களால் தாக்குவதும் காணப்படுகிறது. மூன்று தாக்குதலாளிகளில், ஒருவர் பாதிக்கப்பட்டவரைப் பிடித்துக் கொண்டிருப்பதைக் காணலாம், மற்ற இருவரும் அவரை கண்மூடித்தனமாக அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கினர். அதன்பின் ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
ஐதராபாத்தில் பட்டப்பகலில் நடந்த காட்டுமிராண்டித்தனமான கொலை குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் இது தொடர்பாக ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவரின் ஆதார் அட்டை விவரத்தின்படி, அவர் கோத்தி இஸ்தாமியா பஜாரை சேர்ந்த ஜங்கம் சாய்நாத் (32) என போலீசார் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Trigger warning❗️⚠️
— Naveena Ghanate (@TheNaveena) January 22, 2023
Reportedly Jangam Sainath, (32) a resident of Koti was murdered in Jiyaguda #Hyderabad
The accused fled away, police are investigating the issue pic.twitter.com/I5vQRrXrLA
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஆகாஷ், தில்லு, சோனு ஆகியோரை மேற்கு மண்டல அதிரடிப்படை போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தினர்.