நாகலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய 3 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்!!

 
election commission

நாகலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களின் சட்டமன்ற பதவிக்காலம் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் 3 மாநிலங்களின் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் 3 மாநிலங்களின் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

Election commission

அதன்படி, திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 21-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடக்கிறது. மறுபரிசீலனை ஜனவரி 31-ம் தேதியும், வேட்பு மனுவை வாபஸ் பெற பிப்ரவரி 2-ம் தேதியும் கடைசி நாளாகும்.

இதேபோன்று, நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களின் சட்டமன்றத்திற்கு பிப்ரவரி 27-ம் தேதியும், தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெறும் உள்ளது.

Election commission

மார்ச் 2-ம் தேதி 3 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் 3 மாநிலங்களிலும் தேர்தல் விதிமுறை உடனடியாக அமல்படுத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

From around the web