கர்நாடகாவில் உள்ள கோவிலில் பெண்ணுக்கு அடி, உதை.. அதிர்ச்சி வீடியோ!

 
Bangalore

கர்நாடாகவில் சாமி கும்பிட வந்த பெண் ஒருவரை கோவிலின் அறங்காவலர் ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரில் அமிர்தஹள்ளி பகுதியில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் ஒன்று அமைந்துள்ளது. இங்கு, சாமி கும்பிட வந்த பெண் ஒருவரை கோவிலின் அறங்காவலர்களில் ஒருவரான முனிகிருஷ்ணப்பா என்பவர் அடித்து, துன்புறுத்தியுள்ளார். அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்தபடி, கோவிலில் இருந்து தர தரவென்று இழுத்து சென்று வெளியே விட்டுள்ளார்.

இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அந்த பெண் தாக்குதல் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், முனிகிருஷ்ணப்பா என்பவர் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டார். குளிக்காமலோ அல்லது தூய்மையாக இல்லாமலோ கோவிலுக்கு வர கூடாது என கூறினார்.

Bangalore

கோவிலுக்குள் உன்னை அனுமதிக்க முடியாது. கருப்பாக இருக்கிறாய் என கூறி, உடல்ரீதியாக திட்டியும், அடித்தும் துன்புறுத்தினார் என தெரிவித்து உள்ளார். இரும்பு தடி கொண்டு அடிக்கவும் முயன்றார். கோவில் பூசாரிகள் அவரை தடுத்தனர். இதுகுறித்து வெளியே கூறினால், என்னையும், கணவரையும் கொலை செய்து விடுவேன் என அவர் மிரட்டினார் என தெரிவித்து உள்ளார்.

எனினும், குற்றச்சாட்டுக்கு உள்ளான முனிகிருஷ்ணப்பா தரப்பிலும் பதிலுக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதில், அந்த பெண்ணை கோவிலில் இருந்து வெளியேற்ற வேண்டும். ஏனெனில், கோவில் கருவறைக்குள் அத்துமீறி அவர் நுழைய முயன்றார். அந்த பெண் கோவிலுக்கு வந்து, என் மீது சாமி வந்து விட்டார். வெங்கடேஸ்வரா எனது கணவர். கோவில் கருவறையில் வெங்கடேசனின் அருகே நான் அமர வேண்டும் என அவர் வற்புறுத்தினார். ஆனால், பூசாரிகள் அவரை விடவில்லை.


அவரை தடுத்து நிறுத்தியபோது ஆத்திரமடைந்த அந்த பெண், பூசாரிகளில் ஒருவர் மீது எச்சில் துப்பினார். பல முறை அவரை வெளியே செல்லும்படி பணிவாக கேட்டு கொள்ளப்பட்டது. அதனை அவர் கேட்கவில்லை. அதனால், நாங்கள் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி இழுத்து வெளியே விடவேண்டிய நிலை ஏற்பட்டது என தெரிவித்து உள்ளார். இருதரப்பு புகாரையும் பெற்று கொண்ட போலீசார், பெண் மீது தாக்குதல் நடந்த சிசிடிவி காட்சி பதிவுகளை பெற்றுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

From around the web