7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை... 10 வயது சிறுவன் கைது!! பகீர் வாக்குமூலம் 

 
rape Abuse

உத்தர பிரதேசத்தில் 10 வயது சிறுவன் ஒருவன், 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் 10 வயது சிறுவன் ஒருவன் 7 வயது சிறுமியை பாலியல் வண்கொடுமை செய்ததாக பங்கஜ் மிஷ்ரா என்ற காவல் நிலைய அதிகாரி வழக்கு பதிவு செய்துள்ளார். சிறுவன் மீது, போக்சோ சட்டத்தின்கீழ் எஃப்.ஐ.ஆர். பதியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அச்சிறுவன் அம்மாவட்டத்தின் சிறார் நீதிமன்றக்குழு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, குற்றமிழைத்த சிறுவன், சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

Pocso act

பாதிக்கப்பட்ட பெண் குழந்தையின் தந்தை கூறிய தகவலின்படி, சிறுமி தற்போது 3-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி அவரது வீட்டில் தனியாக இருந்தபோது இச்சம்பவம் நடந்திருப்பதாகவும், வெளியே சென்ற சிறுமியின் பெற்றோர் வீட்டுக்குள் திரும்பியபோது சிறுமி அழுது கொண்டிருந்ததாகவும், அவரிடம் விசாரிக்கையில் சிறுமியே குற்றச்சம்பவம் தொடர்பாக தகவல் சொன்னதாகவும் தெரிகிறது. அதைத்தொடர்ந்து சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் தரப்பில் சிறுவனிடம் சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டது. அப்போது சிறுவன், தான் செல்போனில் ஆபாச படம் பார்த்ததையும், அதன்பின் சிறுமியிடம் அத்துமீறியதையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இச்சம்பவம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 10 வயது சிறுவனொருவன், பாலியல் வன்கொடுமை குற்றத்தை இழைத்திருப்பதும், அதன் பின்னணியாக செல்போன் இருந்ததாக குறிப்பிட்டிருப்பதும் அதிர்ச்சியையே பலருக்கும் கொடுத்துள்ளது. 

சிறுவர் சிறுமியரிடையே பெற்றோர் செல்போன் தரும்போது, ‘பேரண்டல் கண்ட்ரோல்’ கொடுக்க வேண்டும் - குழந்தைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க வேண்டும் - ஒவ்வொரு பள்ளியிலும் மனநல ஆலோசகரொருவர் இருக்க வேண்டும் - பெற்றோரிடையே குழந்தை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு கொடுக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

From around the web