புத்தாண்டில் மது விற்பனை ஜோர்... அரசுக்கு ரூ.657 கோடி வருவாய்!!

 
New Year celebration

கர்நாடகாவில் புத்தாண்டையொட்டி, ஒரே நாளில், 181 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

புத்தாண்டு என்றாலே, நமக்கு முதலில் தோன்றுவது இரவு நேர விருந்தில் மது அருந்தி, ஆடல் பாடல்களுடன் புதிய ஆண்டை வரவேற்பது தான். அந்த வகையில் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. புத்தாண்டை மதுபானம் அருந்தி இளைஞர்கள் கொண்டாடினார்கள். மதுக்கடைகள், மதுபான விடுதிகள், பப்களில் நேற்று முன்தினம் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Pub

இந்த நிலையில், புத்தாண்டுக்கு (டிச. 31) பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 5.41 லட்சம் லிட்டர் மதுபானம் விற்பனை ஆகி இருப்பதாக கலால்துறையினர் தெரிவித்துள்ளனர். அதாவது மதுபானம் 3 லட்சம் லிட்டரும், 2.41 லட்சம் லிட்டர் பீரும் விற்பனையாகி இருந்தது. ஒரே நாளில் ரூ.181 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கலால்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 9 நாட்களாக மாநிலம் முழுவதும் மதுபானம் அமோக விற்பனையாகி உள்ளது. அதன்படி, கடந்த மாதம் 27-ம் தேதி 3.57 லட்சம் லிட்டர் மதுவும், 2.41 லட்சம் லிட்டர் பீரும் விற்பனையாகி இருந்தது. 28-ம் தேதி 2.31 லட்சம் லிட்டர் மதுவும், 1.67 லட்சம் லிட்டர் பீரும் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. 29-ம் தேதி 2.31 லட்சம் மதுவும், 1.93 லட்சம் லிட்டர் பீரும் விற்பனையாகி இருந்தது. 30-ம் தேதி 2.93 லட்சம் லிட்டர் மதுவும், 2.59 லட்சம் லிட்டர் பீரும் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. ஒட்டு மொத்தமாக கடந்த மாதம் 23-ந் தேதியில் இருந்து 31-ந் தேதி வரை மாநிலத்தில் 20.66 லட்சம் லிட்டர் மதுவும், 15.64 லிட்டர் பீர் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கலால்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Liquor

அதாவது கடந்த 9 நாட்களில் ரூ.1,262 கோடிக்கு மதுபான விற்பனை நடந்திருந்தது. இதன்மூலம் கடந்த 9 நாட்களில் மட்டும் கலால்துறைக்கு ரூ.657 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் கூறினார்கள்.

From around the web