வீட்டில் வெடி விபத்து... 6 பேர் பலி; படுகாயங்களுடன் 8 பேர் மீட்பு!

 
Chapra-blast

பீகாரில் தொழிலதிபரின் வீடு பட்டாசு வெடிப்பில் சிக்கி இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் குடாய் பாக் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் வீடு ஒன்றில் இன்று திடீரென பட்டாசுகள் வெடித்து உள்ளன. இதில், வீட்டின் ஒரு பகுதி வெடித்து விழுந்துள்ளது. வீட்டின் மற்ற பகுதியில், பட்டாசு வெடித்ததில் தீப்பற்றி கொண்டது. இதனால், வீட்டின் பெரும்பகுதி இடிந்து விழுந்துள்ளது.

Chapra-blast

இந்த சம்பவத்தில், சிக்கி 6 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 8 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். அவர்கள் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். மாவட்டத்தின் தலைமையகம் அமைந்த சாப்ரா நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் கிராமம் உள்ளது.

இதுகுறித்த விசாரணை மேற்கொள்ள தடயவியல் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழு வரவழைக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட வீடு, தொழிலதிபர் சபீர் உசைன் என்பவருடையது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


வீட்டில் பட்டாசு வெடித்தபோது, வீட்டின் உள்ளே பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன. வெடிசத்தம் தொடர்ந்து ஒரு மணிநேரம் கேட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web