ட்ரூகாலருக்கு பை பை... விரைவில் பெயருடன் காட்டப்படும் அழைப்புகள் மட்டுமே.. டிராய் ஆணையம் உத்தரவு!!

 
Caller

அனைத்து தொலைபேசி அழைப்புகளையும் பெயருடன் காண்பிக்கும் முறை விரைவில் அமல் செய்யப்பட வேண்டும் என டிராய் தகவல் தெரிவித்துள்ளது.

இன்றைய நவீன யுகத்தில் செல்போன் இல்லாமல், தனி மனிதனால் வாழ முடியாது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த செல்போனில் வரும் அழைப்புகள், இதுவரை நாம் சேமிக்காத நம்பரைக் கொண்டிருந்தால், வெறும் போன் நம்பர் மட்டுமே செல்போன் முகப்பு பக்கத்தில் நமக்கு கிடைக்கும்.

அந்த எண்ணிற்கான நபரை தெரிந்து கொள்ள விரும்பினால், ட்ரூகாலர் செயலியை பயன்படுத்த வேண்டும். தற்போது அதற்கான மாற்று வழிகளை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கொண்டு வந்துள்ளது.

Caller
 
இது குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும் இந்த ஆலோசனைக்கு பின்னர் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தொலைபேசி அழைப்பை அழைக்கப்படும் நபருக்கு பெயருடன் காண்பிக்க வேண்டும் என்ற புதிய விதியை அமல் படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
 தற்போது தொலைபேசி அழைப்பில் அழைக்கும் நபர் யார் என்பதை கண்டு பிடிப்பதற்கு வசதியாக ட்ரூகாலர் உள்பட பல செயலிகள் இருக்கும் நிலையில் இந்த விதி அமல் செய்யப்பட்டால் அந்த செயலிகளின் தேவை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

TRAI
 
பயனர்களிடம் இருந்து பெரும் கேஒய்சி தரவுகளின் அடிப்படையில் தொலைபேசி அழைப்புகளை பெயருடன் காண்பிக்க முடியும் என்றும் இதை கண்டிப்பாக அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அமல்படுத்த வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன

தொலைபேசி அழைப்புகளை பெயருடன் காண்பிக்க வேண்டும் என தொலைபேசி நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பு புதிய விதியை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

From around the web