கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி... ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட இளம் பெண் பரிதாப பலி!!

 
Anju

கேரளாவில் ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட இளம் பெண் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலா பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சு ஸ்ரீ பார்வதி (20). இவர் கடந்த டிசம்பர் 31-ம் தேதி ஆன்லைன் வாயிலாக பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். பின்னர் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

Briyani

உடல்நிலை மோசமானதை தொடர்ந்து கர்நாடகாவின் மங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவர் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் அஞ்சு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பத்தனம்திட்டாவில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், “இந்தச் சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்பு ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன். மாவட்ட மருத்துவ அதிகாரியும் மாணவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தரமற்ற உணவை விற்பனை செய்த உணவகங்களின் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. உணவு பாதுகாப்பு தரச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Dead-body

முன்னதாக கோட்டயம் மருத்துவக் கல்லூரி செவிலியர் ஒருவர் கோழிக்கோடு உணவகத்தில் உணவு அருந்திய பின்னர் உயிரிழந்தார். ஒரே வாரத்தில் இரண்டு பேர் தரமற்ற உணவால் உயிரிழந்த நிலையில், மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

From around the web