92 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்... டூவீலரில் லிஃப்ட் கொடுத்த இளைஞர் வெறிச்செயல்!!

 
rape

இரவில் பேருந்துக்காக காத்திருந்த 92 வயது மூதாட்டிக்கு லிஃப்ட் கொடுப்பது பைக்கில் அழைத்துச் சென்று புதரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் ஷாதோல் அடுத்த ஜபல்பூரைச் சேர்ந்தவர் 92 வயது மூதாட்டி. இவரது உறவினர்கள் மட்வா கிராமத்தில் உள்ளனர். இவர்களைப் பார்ப்பதற்காக ஜபல்பூரில் இருந்து ஷாதோலுக்கு ரயில் மூலம் வந்த மூதாட்டி, நள்ளிரவில் ரயில் நிலையத்தை அடைந்துள்ளார். ஆட்டோ மூலம் அந்தாரா கிராமத்தை அடைந்துள்ளார் மூதாட்டி, தன் உறவினர்களின் சொந்த ஊரான மட்வா கிராமத்திற்கு செல்ல பேருந்திற்காக காத்திருந்தார்.

அப்போது மோட்டர் பைக்கில் வந்த வாலிபர், மட்வா கிராமத்திற்கு அழைத்துச் செல்வதாக மூதாட்டியை அழைத்துள்ளார். இதை நம்பி அவரது வாகனத்தில் கிராமத்திற்கு மூதாட்டி சென்றுள்ளார். ஊர் எல்லையைத் தாண்டி காட்டுப் பகுதிக்கு சென்றதும், வாகனத்தை நிறுத்திய வாலிபர் மூதாட்டியிடம் எல்லை மீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

rape

மேலும், காட்டுப்பகுதிக்குள் மூதாட்டியை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்து உறவினர்கள் கிராமத்திற்குள் நுழைந்த மூதாட்டி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து உறவினர்களிடம் கூறியுள்ளார்.  அந்த மூதாட்டியை புதருக்குள் இழுத்துச் சென்று அந்த வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மூதாட்டியின் உறவினர்கள் அளித்த புகாரில், அந்தாரா பகுதியைச் சேர்ந்த பகவந்தா கோல் என்பவரை அடையாளம் கண்டு கைது செய்ததாக போலீசார் கூறினர். 42 வயதான பகவந்தா கோலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

arrest

92 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி பெண்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம் இதேபோல் முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருந்த முதிய பெண்ணை, நோட்டமிட்டு 20 வயது இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அந்த சம்பவம் தொடர்பாகவும் விசாரனை நடத்தி வருவதாகவும் போலீசார் கூறினர்.

From around the web