செல்போன் பேட்டரி வெடித்து சிதறியதில் 8 மாத குழந்தை பலி: உத்தரபிரதேசத்தில் சோகம்

 
Mobile-blast

உத்தர பிரதேசத்தில் சூரிய ஒளி மூலம் செல்போனை சார்ஜ் செய்த போது திடீரென வெடித்ததில் 8 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் வசித்து வருபவர் சுனில் குமார் காஷ்யப். கூலித் தொழிலாளியான இவருக்கு குஷம் என்ற மனைவியும், இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கின்றன. இதில் 2வது பெண் குழந்தைக்கு 8 மாதமே ஆகியிருந்தது. இவர்கள், மின் இணைப்பு இல்லாத தற்காலிக குடியிருப்பில் வசித்து வந்தனர். சூரியஔி சோலார் தகடு மூலம் மின்சார உற்பத்தி செய்து, அதனை பயன்படுத்தி வந்தனர்.

Mobile blast

இந்த நிலையில் 8 மாத குழந்தை கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருக்க வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த சூரிய ஒளி மின்சாரம் இணைப்பில் மூலம் செல்போனுக்கு சார்ஜ் ஏற்றிய சுனில், செல்போனை குழந்தை தூங்கிய கட்டிலில் வைத்திருந்தார். அப்படியே சார்ஜ் ஏறிக் கொண்டிருந்தது எல்லோரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென்று பலத்த சத்தத்துடன் செல்போன் வெடித்து சிதறியது.

இதனால் படுக்கையில் தீப்பற்றிக் கொண்டதாகவும், இதில் 80 சதவீத தீக்காயம் அடைந்த அந்த பச்சிளம் பெண் குழந்தை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டது, அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

baby

இந்த சம்பவத்தில் கவனக்குறைவு ஒரு உயிரை காவு வாங்கி உள்ளதாக சுட்டிக்காட்டும் மின்னியல் நிபுணர்கள் எக்காரணத்தை கொண்டும் செல்போன்களை படுக்கையில் சார்ஜ் போட்டு விட்டு தூங்கச்செல்லகூடாது என்றும் செல்போன்களில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே சார்ஜ் ஏற்ற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

செல்போன் பேட்டரி 100 சதவீதம் இலக்கை எட்டியும் சர்ஜரிலேயே சொறுகப்பட்டிருந்தால் மின்சாரம் வீணாவதோடு செல்போனில் உள்ள லித்தியம் அயன் பேட்டரியால் எதிர்பாராத ஆபத்து நிகழ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கின்றனர். பேட்டரி உப்பிய நிலையில் காணப்பட்டாலோ, அல்லது விரைவாக செல்போன் பவர் இழந்தாலோ அந்த செல்போனை பழுது பார்ப்பது அல்லது உடனடியாக மாற்றுவது அவசியம் என்று மின்னியல் நுபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

From around the web