முதலை தாக்கியதில் ஆற்றில் மூழ்கி 8 பக்தர்கள் பலி... மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!!

 
MP

மத்திய பிரதேசத்தில் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சம்பல் ஆற்றில் இறங்கி சென்ற பக்தர்களை முதலை தாக்கியதில் நீரில் மூழ்கி 8 பேர் உயிரிழந்தனர்.

மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தின் சிலாவாத் கிராமத்தில் குஷ்வாஹா சமூகத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களில் சில ஆண்கள், பெண்கள் கைலா தேவி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய புறப்பட்டனர். அவர்கள் மொரீனா மாவட்டத்தில் உள்ள சம்பல் ஆற்றில் இறங்கி நடந்து சென்று உள்ளனர். 

crocodile

அவர்கள் ஆதரவாக ஒருவருக்கு ஒருவர் கையை பிடித்தபடி தண்ணீரில் நடந்து உள்ளனர். இந்த ஆற்றில் முதலைகள் அதிகம் உள்ளன என கூறப்படுகிறது. திடீரென ஒரு முதலை அவர்களை தாக்கி உள்ளது. இதனால் பயந்து போன அவர்கள் நீரில் மூழ்கி உள்ளனர். 

ஆற்றில் நீரோட்டமும் அதிகளவில் இருந்து உள்ளது. இதில், 8 பேர் நீரில் அடித்து செல்லப்பட்டனர். எனினும், 9 பேர் நீந்தி கரை சேர்ந்து விட்டனர். ஆற்றின் குறுக்கே பாலம் எதுவும் இல்லாத சூழலில், வேறு வழியின்றி கோவிலுக்கு ஆற்றில் இறங்கி சென்று உள்ளனர். 

Dead-body

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இதுவரை தேவகிநந்தன் (50), என்ற ஆண், கல்லோ பாய் என்ற பெண் மற்றும் அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர் என 3 பேரின் உடல்களை மீட்டு உள்ளனர். மீதமுள்ள 5 பேரை காணவில்லை. அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்து இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web