இந்தியா முழுவதும் ஒரே நாளில் 605 பேருக்கு கோரோனா.. 4 பேர் பலி!

 
ICV

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 605 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 605 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,50,18,739 ஆக அதிகரித்துள்ளது.

India-corona

கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,33,396 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 648 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை 4,44,81,341 பேர் குணமடைந்துள்ளனர்.

நேற்று வரை 4,049 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது 4,002 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Corona India

இதுவரை மொத்தம் 93,58,79,495 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை 220.67 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

From around the web