மத்திய ரயில்வேயில் 548 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்!
![SECR](https://a1tamilnews.com/static/c1e/client/82560/uploaded/deb99d165c60d18189c21cdcae4cd0d4.jpg)
தென்கிழக்கு மத்திய ரயில்வேயின் பிலாஸ்பூர் கோட்டம் 1961 அப்ரண்டிஸ் சட்டம் கீழ் Trade Apprenticeship பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பணியின் பெயர் : Trade Apprenticeship
பணியிடங்கள் : 548
கல்வி தகுதி :
10+2 முறையின் கீழ் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தொடர்புடைய டிரேடுகளில் ஐடிஐ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 01.07.2023 அன்று 15 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் மற்றும் 24 வயதை பூர்த்தி செய்திருக்கக் கூடாது. அதிகபட்ச வயது வரம்பில் SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள், OBC க்கு 3 ஆண்டுகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் PWD-க்கு 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 03.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.06.2023