4,374 காலிப்பணியிடங்கள்... பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

 
BARC

மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற அணு ஆராய்ச்சி நிலையமான பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு என்னென்ன தகுதிகள் தேவை என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பணி: டெக்னிக்கல் ஆபிசர், சயின்டிபிக் அசிஸ்டென்ட், டெக்னீசியன்

மொத்த பணியிடங்கள்: 4,374 (நேரடி தேர்வு முறை - 4162, பயிற்சி திட்டம் - 212)

கல்வித் தகுதி:

இதற்கு விண்ணப்பிக்க B.E., B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ்,எலக்ட்ரிக்கல், மெட்டீரியல், கம்யூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளில் பொறியாளர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: 

BARC

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க நேரடி தேர்வு முறைக்கு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு குறித்த முழு விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் காணவும். 

தேர்வு செய்யப்படும் முறை: 

இந்த வேலைவாய்ப்பிற்கு முதல்நிலை தேர்வு,அட்வான்ஸ் தேர்வு, திறனறிவு தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முதல்நிலை தேர்வு

இதில் கணிதம்,அறிவியல், பொது அறிவு உள்ளிட்ட பாடங்களில் இருந்து கேள்விகள் (50 மதிப்பெண்) கேட்கப்படும். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் ‘Advanced Test’-ல் பங்கேற்க அழைக்கப்படுவர்.

application

விண்ணப்பிப்பது எப்படி?

https://barconlineexam.com/ என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: டெக்னிக்கல் அதிகாரி - ரூ.500, விஞ்ஞான உதவியாளர் - ரூ.150, டெக்னீச்சியன் -பி - ரூ.100, ஊக்கத்தொகை பெறும் பயிற்சி திட்டம் (பிரிவு -1 - ரூ.150, பிரிவு -1 - ரூ.150)

தேர்வு மையங்கள்:

கோயம்புத்தூர், கொல்கத்தா, புனே, உதய்பூர்,விஜயவாடா, விசாகப்பட்டினம், பாட்னா, சென்னை, மதுரை, எர்ணாகுளம் உள்ளிட்ட தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் தேர்வு மையத்தை தேர்ந்தெடுக்கலாம். 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.05.2023

From around the web